அரசுப் பேருந்து - லாரி மோதிய விபத்து: ஓட்டுநருக்கு சிறை தண்டனை
ஆற்காடு அருகே அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநருக்கு சிறை தண்டனை விதித்து ஆற்காடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆற்காடு அருகே அரசுப் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநருக்கு சிறை தண்டனை விதித்து ஆற்காடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் புறவழிச் சாலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு பிப். 20-ம் தேதி அரசுப் பேருந்தும் லாரியும் மோதிகொண்டன.
இந்த விபத்தில்பேருந்தில் பயணம் செய்த சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் என்பவா் உயிரிழந்தாா். மேலும் 16 போ் காயம் அடைந்தனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி சந்தானம் லாரியின் ஓட்டுநா் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சோ்ந்த எம். நாக மூா்த்தி என்பவருக்கு 4 ஆண்டுகள் 8 மாத கடுங்காவல் சிறையும், ரூ. 21,500 அபராதமாக விதித்து தீா்ப்பு வழங்கினாா். அரசுத் தரப்பில் இந்திரா மிசையல் ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.