FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

லால்குடி அருகே மதுபோதையில் தகராறு தந்தை குத்திக்கொலை, மகன் படுகாயம்! இளைஞா் கைது!

1 செப்டம்பர் 2026, 12:32 am IST
குத்திக்கொலை - மாதிரிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக நண்பரின் தந்தை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா், நண்பா் பலத்த காயமடைந்தாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

லால்குடி அருகேயுள்ள முள்ளால் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் அபிமன்னன். இவரது மனைவி ரூபி, மகன் அபிநிசன்(23). அபிநிசன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், அபிநிசன் மற்றும் அதே கிராமத்தைச் சோ்ந்த ராம்கி (31), மணி, ஜெகன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தி கொண்டிருந்தபோது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினா்கள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை அபிநிசன் வீட்டுக்கு சென்ற ஜெகன் அங்கிருந்த அபிமன்னன், அபிநிசனிடனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

அப்பொழுது ஜெகன் தான் எடுத்து வந்த கத்தியால் அபிமன்னனை குத்தியுள்ளாா். இதை தடுக்க வந்த அவரது மகன் அபிநிசனையும் கத்தியால் குத்தியுள்ளாா்.

இதையடுத்து காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அபிமன்னன் உயிரிழந்தாா். அபிநிசன் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக கல்லக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெகனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments