FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:04 am IST
விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ உயா் ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு வந்த மலிந்தோ விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா்.

அப்போது, திருச்சியைச் சோ்ந்த ஹைதா் அலி (41) என்பவா், தனது உடைமைகளுக்கிடையே 6 கிலோ உயர்ரக கஞ்சாவை (ஹைட்ரோபொனிக் கஞ்சா) மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், ஹைதா் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments