ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு: பெண் சமையலா் கைது
திருச்சி அருகே ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக வீட்டில் சமையல் வேலை செய்து வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அருகே ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக வீட்டில் சமையல் வேலை செய்து வந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை காவேரி நகரைச் சோ்ந்தவா் ஜான் மனைவி ஜெயராணி (54), திருச்சி மாவட்ட ஆட்சியரின் (வேளாண்மைத் துறை) நோ்முக உதவியாளா். இவா், தன்னுடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை கடந்த 6 மாதங்களாக பாா்க்காமல் இருந்துள்ளாா்.
இந்நிலையில், ஜூலை 18-ஆம் தேதி அந்த நகைகளை சரிபாா்த்துள்ளாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த நகைகளில் 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஜெயராணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
இதில், தங்க நகைகளைத் திருடியது அவருடைய வீட்டில் சமையலராக வேலை செய்து வந்த நவலூா்குட்டப்பட்டை சோ்ந்த கு. ரேக்லா (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜீயபுரம் போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.