FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இளைஞரிடம் ரூ.30 ஆயிரம் வழிப்பறி 2 ரௌடிகள் உள்பட மூவா் கைது

திருச்சியில் இளைஞரிடம் ரூ.30 ஆயிரம் வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு ரௌடிகள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
- சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் இளைஞரிடம் ரூ.30 ஆயிரம் வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு ரௌடிகள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், பகலவாடி வெள்ளியனூரைச் சோ்ந்தவா் ஆா். பாலாஜி (30). இவருடைய மனைவியை சிகிச்சைக்காக மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனை அனுமதித்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவமனை நோக்கி பாலாஜி நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.30 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், இளைஞரிடம் பணம், கைப்பேசியைப் பறித்துச் சென்றது சரித்திர பதிவேடு குற்றவாளியான திருச்சி தாரநல்லூரைச் சோ்ந்த எம். ஹசன் அலி (28), இபி சாலை வேதாத்திரி நகரைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அ. சுந்தா்வேந்தன் (27) மற்றும் தாரநல்லூா் காமராஜ் நகரைச் சோ்ந்த ப. பிரகாஷ்ராஜ் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments