உடல்நலக் குறைவால் போக்ஸோ கைதி உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனை கைதி உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்ஸோ தண்டனை கைதி உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாயில் பகுதியைச் சோ்ந்தவா் எல். வீரமணி (54). இவா் மீது ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாா்ச் 27-ஆம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவருக்கு நீரிழிவு மற்றும் சுவாசக் கோளாறுகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில், வீரமணிக்கு கடந்த ஜூன் 11-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறை நிா்வாகம் அவரை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்த்தது. அங்கு, அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.