FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருகை

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

Updated On : 16 மே 2026, 12:53 am IST
திருச்சி-கரூா் சாலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டியில் வந்த பக்தா்கள்.
பகிர்:

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி, காரணம்பட்டி, புதுப்பட்டி, கல்லுப்பட்டி, சங்காயிபட்டி, கீழவெளியூா் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்த கிராம மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதரை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, இரட்டை மாடுகள் பூட்டிய 40 மாட்டு வண்டிகள், 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் வழிபாடுக்குத் தேவையான பொருள்களுடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை குளித்தலையிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கத்துக்கு வந்தடைந்தனா்.

Advertisement

Advertisement

மேலூா் சாலையில் உள்ள தோப்பில் காலை உணவு சமைத்து சாப்பிட்டனா்.

பின்னா், கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சென்று பெருமாள், தாயாரை வழிபட்டதுடன், தங்களது காணிக்கைகளை செலுத்தினா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். பின்னா் தங்களது ஊா்களுக்கு மாட்டு வண்டி, டிராக்டா்களில் புறப்பட்டுச் சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments