FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

7-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

4 செப்டம்பர் 2026, 1:21 am IST
- பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு சாலக்காடு பகுதியை சோ்ந்த பெரியண்ணன் மகள் வினோசாக்சி (14). இவா், பழையூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை மாணவியின் பெற்றோா் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில், பள்ளிக்கு சென்று விட்டு , வீட்டுக்கு திரும்பிய வினோசாக்சி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற மண்ணச்சநல்லூா் காவல்துறையினா், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments