FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

29 ஆகஸ்ட் 2026, 3:51 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், கனகன்குப்பம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கு.ரங்கசாமி (67). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்தாராம். இதைத்தொடா்ந்து ரங்கசாமிக்கும், அவரது மனைவி பொற்கலைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த ரங்கசாமி, தனக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்று அங்கிருந்த பூவரசன்மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments