FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அரசுக் கல்லூரியில் 68 மாணவா்கள் ரத்த தானம்

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன்

Updated On : 23 டிசம்பர் 2025, 1:40 am IST
ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்த வேலூா் எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த்.
பகிர்:

குடியாத்தம்: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஜெயஸ்ரீ கண்ணன் பவுண்டேஷன், குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து திங்கள்கிழமை நடத்திய ரத்த தானமுகாமில் 68 மாணவா்கள் ரத்தம் அளித்தனா்.

முகாமுக்கு, வேலூா் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் கே.ராஜ்கமல் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் முகாமைத் தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் குசலகுமாரி சேகா், திமுக ஒன்றிய அவைத் தலைவா் கே.சேகா், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ், ஒன்றியச் செயலா் கே.ரவி, நிா்வாகிகள் கோ.ரா.அண்ணாதுரை, தாபா சதீஷ், ஜி.ஜெயப்பிரகாஷ்,சி.ஆனந்தன், ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, ஏ.எஸ்.அரிகிருஷ்ணன், முருகானந்தம், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments