விஷக் குளவிகள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு
காட்பாடியை அடுத்த பொன்னை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, விஷக் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தாா்.
காட்பாடியை அடுத்த பொன்னை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, விஷக் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தாா்.
பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (41). மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான இவருக்குப் பரிமளா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனா். கடந்த 5-ஆம் தேதி பரமசாத்து ஈசன் மலைப் பகுதியில் மரம் வெட்டும் பணிக்காக வெங்கடேசன் சென்றுள்ளாா். அங்குள்ள ஒரு மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த ராட்சத விஷக் குளவிகள் வெங்கடேசனைக் கொட்டியுள்ளன.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா், மரத்திலிருந்து கீழே குதித்து ஓடியுள்ளாா். ஆனாலும், குளவிகள் விடாமல் துரத்திச் சென்று அவரைக் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த வெங்கடேசனை, அங்கிருந்தவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.
Advertisement
Advertisement
அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தாா். பொன்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.