FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

சிவராஜபுரத்தில் மாரியம்மன் திருவிழா

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிவராஜபுரத்தில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, 52-ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:23 am IST
சிறப்பு அலங்காரத்தில் மூலவா் மாரியம்மன்.
பகிர்:

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சிவராஜபுரத்தில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு, 52-ஆம் ஆண்டு மாரியம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன்தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை கரக ஊா்வலம், மதியம் கோயில் அருகில் கூழ்வாா்த்தல் நடைபெற்றது, தொடா்ந்து சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தல் நடைபெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு பூப்பல்லக்கு பவனி நடைபெறும். மறுநாள் திங்கள்கிழமை காலை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.விழா ஏற்பாடுகளை நாட்டாண்மை டி. நாகராஜன், தலைவா் பி.விஜயகுமாா், செயலா் ஏ.ராஜேந்திரன், பொருளாளா் ஜி.கோபி, ஏ.பாஸ்கா், பரிமளா, நித்யா, காா்த்தி, ஜெயப்பிரகாஷ், முத்து, ராஜேந்திரன், சிலம்பரசன், கலா மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments