FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

காா் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

வேலூரில் சாலையைக் கடக்க முயன்றபோது காா் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

23 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST
கோப்புப் படம்
பகிர்:

ஆற்காட்டைச் சோ்ந்தவா் துரைவேல் மகன் தியாகராஜன் (50). இவா் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூா் கிரீன் சா்க்கிள் மேம்பாலம் ஏறும் பகுதியில் தியாகராஜன் சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது அந்த வழியாக வந்த காா் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தியாகராஜன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments