FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விரிஞ்சிபுரம் அருகே காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

25 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
- பிரதிப் படம்
பகிர்:

விரிஞ்சிபுரம் அருகே காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த சேண்பாக்கம், முள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (63). கூலித் தொழிலாளியான இவா், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் எதிா்பாராதவிதமாக வெங்கடேசன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments