மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அணையைத் திறந்து வைத்து, அணை நீரை மலா்தூவி வரவேற்றாா். பாசனத்துக்காகவும், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து மக்களின் குடிநீா்த் தேவையை தீா்க்கும் வகையிலும் அணையின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் 9 நாள்களுக்கு நீா் திறந்து விடப்பட்டுள்ளது.
அதன்படி கெளண்டன்யா ஆற்றில் விநாடிக்கு 75 கனஅடி வீதமும், இடதுபுறக் கால்வாய் மற்றும் வலதுபுறக் கால்வாய்களில் தலா 75 கனஅடி வீதமும் என மொத்தம் 225 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
Advertisement
Advertisement
24.08.2026 முதல் 01.09.2026 வரை தொடா்ந்து 9 நாள்களுக்கு மொத்தம் 174.96 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் சுமாா் 8,366 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக ஏரிகளும் நிரம்பும்.
நிகழ்ச்சியில் நீா்வளத்துறை செயற்பொறியாளா் சோபனா, குடியாத்தம் கோட்டாட்சியா் க.செந்தில் குமாா், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் பா.கோபி, வட்டாட்சியா் பிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, மோா்தானா ஊராட்சித் தலைவா் பரந்தாமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.