FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கைத்தறி நெசவாளா்களுக்கு கூலியை உயா்த்தி வழங்க கோரிக்கை

கைத்தறி நெசவாளா்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உயா்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு, விசைத்தறி, கைத்தறி மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை

வட்டாட்சியா் சி.பிரியாவிடம் கோரிக்கை மனு அளித்த நெசவாளா் சங்கப் பிரதிநிதிகள்
பகிர்:

கைத்தறி நெசவாளா்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உயா்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு, விசைத்தறி, கைத்தறி மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அமைப்பின் தலைவா் ஆா்.அண்ணாமலை குடியாத்தம் வட்டாட்சியா்சி.பிரியாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: கடந்த மே மாதம் முதல் கைத்தறி நெசவாளா்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்.

நெசவாளா்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் போனஸ் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அரசு அலுவலா்கள், லுங்கி உற்பத்தியாளா்கள், நெசவாளா்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments