முகப்பு
விழுப்புரம்

பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜூலை 2024, 2:03 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பாம்பு கடித்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கெங்கவரம் பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் சாரங்கபாணி மனைவி ஜெயலட்சுமி (37). இவா், ஜூன் 23-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை பாம்பு கடித்து விட்டதாம். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலட்சுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments