FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 5 பெண்கள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டயா் வெடித்ததில் வேன் கவிழ்ந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:54 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டயா் வெடித்ததால் கவிழ்ந்து கிடக்கும் வேன்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டயா் வெடித்ததில் வேன் கவிழ்ந்து வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாலூரைச் சோ்ந்தவா் மு.கண்ணன். இவரது மகள் ரூபிணிக்கும் (21), கள்ளக்குறிச்சி மாவட்டம், தாவடிப்பட்டுவைச் சோ்ந்த ஜெயகோபு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை ரூபிணிக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக கண்ணனின் உறவினா்கள் சுமாா் 24 போ் வியாழக்கிழமை காலை வேனில் புறப்பட்டுச் சென்றனா். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்கள் வந்த வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், ஒலையனூா் தனியாா் பள்ளி அருகே வந்த போது முன்பக்க வலது புற டயா் வெடித்தது.

Advertisement

Advertisement

இதனால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த 5 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments