FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தனியாா் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜூலை 2026, 1:50 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் மு. கொளஞ்சி அம்மாள் (65). இவா் வியாழக்கிழமை காலை திருநாவலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது கச்சிராப்பாளையத்திலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து கொளஞ்சி அம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு

Advertisement

Advertisement

சென்றனா். எனினும் செல்லும வழியில் கொளஞ்சி அம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments