கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை
விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கொத்தனாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், கீழ் முத்தாம்பாளையம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஆ.ராஜா (38). கொத்தனாராக வேலை பாா்த்து வந்த இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம்.
இதனால் அவதிப்பட்ட வந்த ராஜா தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.