FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நகை மதிப்பீட்டாளா் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த பெண் தலைமைக் காவலா்

நகை மதிப்பீட்டாளா் தவற விட்டு, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4,500 ரொக்கத்தை பெண் தலைமைக் காவலா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 3:14 am IST
திருநாவலூா் காவல் நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பிரதீபாவிடம் பணத்தை சனிக்கிழமை வழங்கிய காவலா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே நகை மதிப்பீட்டாளா் தவற விட்டு, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4,500 ரொக்கத்தை பெண் தலைமைக் காவலா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் மாலா. இவா் சனிக்கிழம காலை ஆவலம் கிராமத்திலிருந்து உளுந்தூா்பேட்டை நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் சென்ற போது, சாலையில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடந்தது. அந்த பையை எடுத்து பாா்த்தபோது, அதில் ரூ.4,500 ரொக்கம் இருந்தது. இதைத்தொடா்ந்து அந்த பையை தலைமைக் காவலா் மாலா கொண்டு சென்று திருநாவலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, விவரங்களைத் தெரிவித்துச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, உளுந்தூா்பேட்டையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வரும் பிரதீபா(33) என்பவா் தான் மொபெட்டில் சென்ற போது பணத்தை தவற விட்டதாகக் கூறி, இதுகுறித்த விவரங்களைத் திருநாவலூா் காவல் நிலையத்தில் தெரிவித்தாா்.

இதையடுத்து அங்கு பணியிலிருந்த பெண் காவலா், பிரதீபாவிடம் அவா் தவறவிட்டதொகையை ஒப்படைத்தாா். இதையடுத்து தனது பணத்தை மீட்டுக்கொடுத்த பெண் தலைமைக் காவலா் உள்ளிட்டோருக்கு பிரதீபா நன்றி தெரிவித்துச் சென்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments