முகப்பு
விழுப்புரம்

நிலத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா் பேட்டை அருகே நிலத் தகராறில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், டி.கொணலவாடி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.ராமசாமி (71), விவசாயி. இவா் குடும்பப் பிரச்னை காரணமாக தனது மனைவி மற்றும் மகன்களைப் பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா். ராமசாமி வசித்து வந்த 9 சென்ட் வீட்டுமனையில் மகன் கலியபெருமாள் ஷெட் அமைத்து பராமரித்து வந்தாா். இந்நிலையில், ராமசாமி இந்த இடத்தை வேறொரு நபரிடம் விற்பனை செய்வதற்காக மகன் கலியபெருமாள் அமைந்திருந்த ஷெட்டை அப்புறப்படுத்த திங்கள்கிழமை முயற்சித்தாா்.

அப்போது, அதைத் தடுக்க முயன்ற கலியபெருமாளுக்கும், தந்தை ராமசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலியபெருமாள் அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் தந்தையைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ராமசாமி உயிரிழந்தாா். தாக்குதலின் போது கலியபெருமாளுக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கலியபெருமாளை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments