பைக் விபத்தில் இளைஞர் சாவு
பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் திருமுருகன் (21). இவர் புதன்கிழமை தனது பைக்கில் சாத்திப்பட்டு சென்றுவிட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். சாத்திப்பட்டு சாலையில் வந்தபோது, முத்தரசன்குப்பத்தை சேர்ந்த திருமால் என்பவர் வந்த பைக்கும், திருமுருகனின் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருமுருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
பண்ருட்டி வட்டம், கொக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் திருமுருகன் (21). இவர் புதன்கிழமை தனது பைக்கில் சாத்திப்பட்டு சென்றுவிட்டு, இரவில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். சாத்திப்பட்டு சாலையில் வந்தபோது, முத்தரசன்குப்பத்தை சேர்ந்த திருமால் என்பவர் வந்த பைக்கும், திருமுருகனின் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருமுருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.