7 பேரை விடுவிக்க முடிவு: தவாக வரவேற்பு
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வரவேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வரவேற்றுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய குற்றவியல் சட்டம் 435ஆவது பிரிவின்கீழ் மத்திய அரசின் கருத்தைக் கோரவும் கடிதம் அனுப்பியுள்ளது.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற உலகத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதல்வர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.