FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சக்தி விநாயகர் கோயில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்

பண்ருட்டி, காமராஜ் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 6-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கோடியேற்றம் ஆகியவை கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பண்ருட்டி, காமராஜ் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 6-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கோடியேற்றம் ஆகியவை கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 இதையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை 4.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம், அங்குரார்பணத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் ம.ப.பன்னீர்செல்வம், பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், விழாக் குழுவினர், காமராஜ் நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் கற்பக விருட்ச வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, தினமும் காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் தோகை மயில், பூத, சிங்க, யானை, ரிஷப, அன்ன, குதிரை வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். செப். 13-ஆம் தேதி (விநாயகர் சதுர்த்தி) மாலை 4 மணி அளவில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் காட்சியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.
 விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் காமராஜ் நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments