வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
நெய்வேலி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து ஊராட்சி, காந்தி நகரைச் சோ்ந்தவா் நீலகண்டபிள்ளை (65). ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா். இவா் கடந்த 12-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சொந்த ஊரான நாகா்கோவிலுக்குச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் ஊா் திரும்பியவா், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.14 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசுகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.