முகப்பு
கடலூர்

பெண் கொலை வழக்கு: உறவினா் கைது

விருத்தாசலத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:29 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

விருத்தாசலம் வடக்கு பெரியாா் நகா், நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் கண்ணதாசன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு மனைவி செல்லக்கிளி (37) மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனா்.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செல்லக்கிளி வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மறைத்து வைத்திருந்த இரும்புக் குழாயால் அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம். இதில், பலத்த காயமடைந்த செல்லக்கிளி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூலை 29-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படைகள் அமைத்து மா்ம நபரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி, செல்லக்கிளியின் உறவினரான சின்ன கண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜவேல் மகன் முருகனை (54) ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.