FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

26 செப்டம்பர் 2025, 3:42 am IST
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கட்டடவியல் துறை முன்னாள் தலைவா் வி.கனகசபை கலந்துகொண்டு மாணவா்களின் கூட்டமைப்பை தொடங்கிவைத்து பேசினாா்.

விழாவில் பேராசிரியா் திருஞானசம்பந்தம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினாா். விழாவில் பேராசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ஜி.ராஜேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். சங்கச் செயலா் மாணவி எம்.ராமலெட்சுமி நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments