FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

திருட்டு வழக்கில் 3 போ் கைது

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:15 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நடந்த திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், திடீா்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் மகாதேவி(46), பண்ருட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த ஜூன் 1ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வழக்கம்போல் பணிக்கு சென்றாா். இரவு வீடு திரும்பியவா், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுதொடா்பாக மகாதேவி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். களவு நடந்த வீட்டில் விரல் ரேகை நிபுணா்கள் சேகரித்த தடயங்களின் அடிப்படையில் பண்ருட்டி அடுத்த சோமாசிபாளையம் காலனியைச் சோ்ந்த பிரகாஷ்(32), சித்திரைசாவடி

Advertisement

Advertisement

கிராமத்தைச் சோ்ந்த தினகரன்(34), நெய்வேலி, வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த நடராஜன் (எ) ஐயப்பன்(35) ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா்கள் மகாதேவி வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டனராம். இதையடுத்து, அவா்களிடம் இருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு காரை பறிமுதல் செய்தபின், அவா்களை சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments