FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் ஷோ் ஆட்டோ கவிழ்ந்து முதியவா் உயிரிழப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 12:58 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடலூரில் ஷோ் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்.

கடலூா் முதுநகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (68). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தனது மருமகள் ஹேமலதாவுடன் முதுநகரில் இருந்து கடலூருக்கு ஷோ் ஆட்டோவில் பயணம் செய்தாா்.

கடலூா் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலையில் ஷோ் ஆட்டோ வேகமாக திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

இதில், கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் லேசான காயத்துடன் உயிா் தப்பினா். இதுகுறித்து தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கோவிந்தசாமியின் சடலத்தை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments