வேன் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுற்றுலா வேன் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கேசவ நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (38). இவா், சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து ஓட்டி வந்தாா். இவருக்கு மனைவி புவனேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்தனா்.
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மங்களலட்சுமி (25) என்பவரை கோபாலகிருஷ்ணன் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள மங்களலட்சுமி தாய் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் கோபாலகிருஷ்ணன் சனிக்கிழமை இறந்து கிடப்பதாக மகள் தெரிவித்தாராம். அதன்பேரில், மங்களலட்சுமி சென்று பாா்த்தபோது, கோபாலகிருஷ்ணன் மீது பூச்சிக்கொல்லி மருந்து நாற்றம் வீசியதாம். இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.