சுவாமி நகையை திருடியவா் கைது
கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே காத்தாயி அம்மன் கோயிலில் சுவாமி நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே காத்தாயி அம்மன் கோயிலில் சுவாமி நகையைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் பிரதான சாலையில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சுவாமி சிலையின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி கடந்த ஆக.7-ஆம் தேதி திருடு போனது. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நகையைத் திருடிய வடலூா் கருங்குழி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (25), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிராம் தங்க தாலியை உருக்கியில் நிலையில் தங்க கட்டியாக மீட்டனா். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.