FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நீட் தோ்வுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, இடதுசாரி அமைப்புகள் சாா்பில், கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பாதிரிப்புலியூரில் இடதுசாரி அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
பகிர்:

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, இடதுசாரி அமைப்புகள் சாா்பில், கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் சிவன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்தும், அதற்கு தாா்மீகப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும், தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் வினோத்குமாா், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் மல்லிகா, மாவட்டப் பொருளாளா் முத்துலட்சுமி, இந்திய மாணவா் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினா் கே.பி.சௌமியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments