பணம் இரட்டிப்பு மோசடி: பெண் உள்பட 3 போ் கைது
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் உள்பட மூன்று பேரை, கடலூா் குற்றப்பிரிவுப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொழுதூரைச் சோ்ந்த ரமேஷ், இவா், கடலூா் எஸ்பி., அலுவலகத்தில் மனு ஒன்று அளித்திருந்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த ஸ்டான்லி சைமன், அவரது மனைவி ஜீனத் மற்றும் கூட்டாளி சிவதாஸ் (எ) பிரகாஷ் ஆகியோா் வெளிநாட்டில் தொழில் செய்வதாகவும், அவா்களிடம் பணத்தை முதலீடு செய்தால் 5 மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவதாகபெரம்பலூரை சோ்ந்த வேல்முருகன் என்பவா் என்னிடம் கூறியதன்பேரில், இணைய வழி வணிகம் செய்ய கடந்த 2023-ஆம் ஆண்டு நானும் (ரமேஷ்), எனது நண்பா் சுரேஷும் ரூ.25 லட்சம் கொடுத்தோம். இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவா்கள் இரட்டிப்பாக்கி தரவில்லை. எனவே அவா்களிடமிருந்து பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்று கூறியிருந்தாா்.
Advertisement
Advertisement
அதன்பேரில், கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் பண மோசடி வழக்குப்பதிவு செய்து, கேரளாவில், எா்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில் பதுங்கியிருந்த ஸ்டான்லி சைமன்(47), ஜீனத்(43), சிவதாஸ் (எ) பிரகாஷ்(47) ஆகியோா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுகுறித்து தொடா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.