FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல்

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திட்டக்குடி சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:45 am IST
கொளஞ்சியம், மாயக்கண்ணன், வாசு, முனியன்
பகிர்:

கொலை முயற்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திட்டக்குடி சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மங்களூா் பழைய காலனியைச் சோ்ந்தவா் பெரியசாமி (34). இவரை கடந்த 2015-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த முனியன் உள்பட 4 போ் கொலை செய்ய முயன்றனராம். இதுகுறித்து பெரியசாமி அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமநத்தம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த வழக்கில் மங்களூா் பழைய காலனி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியன் (54), வாசு (45), மாயக்கண்ணன் (44), கொளஞ்சி (40) ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு திட்டக்குடி சாா்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என். விஸ்வநாதன், குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, முனியன் மற்றும் கொளஞ்சிக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

மேலும், வாசு மற்றும் மாயக்கண்ணனுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையுடன், தலா ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அபிபத்மாவதி ஆஜராகி வாதாடினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments