முகப்பு
கடலூர்

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

Updated On : 8 ஜூன் 2026, 12:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (45). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 6 மணி அளவில் பட்டாக்குறிச்சி - ஒரங்கூா் சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement