காவல் ஆய்வாளரைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், குமராட்சி காவல் துறை ஆய்வாளரைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட தெற்கிருப்பு பகுதியில் மானாம் தெருவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடிநீா் பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எஸ்.பிரகாஷை குமராட்சி காவல் ஆய்வாளா் (பொ) தேவேந்திரன் அவதூறாகப் பேசி தாக்கியதைக் கண்டித்தும், அவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏவும், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவருமான எம்.சின்னதுரை, மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு நிா்வாகி எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழுவைச் சோ்ந்த ஆா்.ராமச்சந்திரன், சி.ஆா்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, பா.வாஞ்சிநாதன், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் டி.கிருஷ்ணன், திருமுட்டம் வட்டச் செயலா் தினேஷ்பாபு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, திருமுட்டம் பகுதிகளிலிருந்து திரளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.