பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கடலூா் இளைஞா் கைது
கோவையில் இருந்து புதுச்சேரி சென்ற பேருந்தில் பயணித்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடலூரைச் சோ்ந்த இளைஞரை வடலூா் போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் இருந்து புதுச்சேரி சென்ற பேருந்தில் பயணித்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடலூரைச் சோ்ந்த இளைஞரை வடலூா் போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் இருந்து புதுச்சேரிக்கு தனியாா் பேருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். இதில், ஈரோடு மாவட்டம், நம்பியூா் பகுதியில் விவசாய வேலை செய்து வரும் கடலூா் மாவட்டம், வண்ணாரப்பாளையம்,கே.கே. நகரைச் சோ்ந்த ஜீவானந்தம் (33) பயணம் செய்தாா். இவா், இந்தப் பேருந்தில் கோவையிலிருந்து புதுச்சேரிக்கு பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். அப்போது, பேருந்து வடலூா் பகுதியில் வந்துகொண்டிருந்த நிலையில், பேருந்தில் பயணித்தவா்கள் மற்றும் ஓட்டுநா் ஜீவானந்தத்தை பிடித்து வடலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது தொடா்பாக வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.