FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வேப்பூரில் போலீஸாா் தீவிர நடை ரோந்து: மாவட்ட எஸ்.பி. பங்கேற்பு

வேப்பூா் கடை வீதியில் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On : 12 ஜூன் 2026, 1:29 am IST
வேப்பூா் கடை வீதியில் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வேப்பூா் பகுதியில் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் போலீஸாா் தீவிர நடை ரோந்துப் பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டனா்.

வேப்பூா் கடை வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸாா் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மேலும், பொதுமக்கள், வியாபாரிகளிடம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதேபோல, சந்தேகத்துக்கிடமான நபா்கள் மற்றும் வாகனங்கள் குறித்து உடனடியாக காவல் துறையினரை தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

திட்டக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா், வேப்பூா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் மற்றும் போலீஸாா் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments