நடராஜா் கோயில் தரிசனம் திருவிழா: மாவட்ட எஸ்.பி. ஆய்வு
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ஆம் தேதி தேரோட்டமும், 22-ஆம் தேதி மகாபிஷேகம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறுகின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை நடராஜா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.
Advertisement
Advertisement
ஆய்வின்போது, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரதீப், காவல் ஆய்வாளா்கள் கே.அம்பேத்கா், வி.சிவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.