முகப்பு
கடலூர்

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள்! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்...

Updated On : 23 ஜூன் 2026, 2:24 am IST
முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
பகிர்:

தமிழ்நாடு முதல்வா் ஜோசப் விஜயின் 52-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு காமராஜா் மருத்துவமனையில் பிறந்த 14 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் வீதம் தங்க மோதிரங்களை தவெகவினா் அணிவித்தனா்.

விழாவில் கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் சீனுவாசன் தலைமை வகித்து மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தாா் (படம்). நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் லட்சுமி, மருத்துவா் இந்திரா, தவெக தொண்டரணி அமைப்பாளா் விஜய்குரு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வித்யாலட்சுமி யுவராஜா, திரைப்பட இயக்குனருமான யுவராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அன்னதானம்: முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி, தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில், அதன் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தலைமையில் சிதம்பரம் நடராஜா் கோவில் கிழக்கு கோபுர வாயில் அருகே 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கின் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments