மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் அடுத்துள்ள சமத்துவபுரத்தில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ராயப்பனூா் மின்சார வாரிய அலுவலகத்தில் வயா்மேனாக பணிபுரிந்து வந்தவா் அத்தியப்பன்(42) (படம்). இவா், சனிக்கிழமை காலை சமத்துவபுரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் விநியோகத்தை சீா் செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அத்தியப்பனை மீட்டு சின்னசேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.