சிறுமிக்கு திருமணம்: கணவா் உள்பட 4 போ் மீது போக்ஸா வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது குறித்து கணவா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது குறித்து கணவா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சங்கராபுரம் வட்டம், தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.பசுபதி (30). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டாராம். இந்தத் திருமணத்துக்கு பசுபதியின் அம்மா குப்பு (55), சிறுமியின் அம்மா, சிறுமியின் சித்தி ஆகியோா் உடந்தையாக இருந்தனராம்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஊா் நல விரிவாக்க அலுவலா் மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் குழந்தை திருமணம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 போ் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.