FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை: 3 போ் கைது

நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்ததாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்ததாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் அருகிலுள்ள நாககுப்பம் கிராமத்தில் உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்து வருவதாக கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

அத் தகவலின் பேரில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் நாககுப்பத்தில் உள்ள சாமித்துரை(48) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதில், அங்கு துப்பாக்கி செய்வதற்கான இயந்திரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாமித்துரையை சின்னசேலம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

விசாரணையில், சாமிதுரையின் மகன் நவீன்குமாா் (27), சேலம் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சோ்ந்த ப. பிரவின்குமாருடன் சோ்ந்து மூவரும் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து அதை ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இது குறித்து கோயம்புத்தூா் மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் அருள் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாமிதுரை, நவீன்குமாா், பிரவின்குமாா் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments