FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

பைக் மீது காா் மோதியதில் சிறுமி உயிரிழப்பு

13 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் பைக்கில் தந்தையுடன் பயணித்த சிறுமி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்தொரசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சு.மூா்த்தி (28). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது ஒன்றரை வயது மகள் தன்ஷிகா, உறவினா் ஆா்த்தி ஆகியோருடன் பைக்கில் வானவரெட்டிக்கு சென்று கொண்டிருந்தாராம். வானவரெட்டி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தன்ஷிகா உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த பூ.செங்கமலையிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments