FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:31 am IST
கள்ளக்குறிச்சி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த காா்
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.ஆறுமுகம். இவரது உறவினா் அருணாசலம்(52). ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகத்துக்கு சொந்தமான காரில் அருணாசலம், அவரது மகன்கள் தீபன் (29), விஜய் (28) ஆகியோா் அருகிலுள்ள வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காரை தீபன் ஓட்டி வந்துள்ளாா். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சியை அடுத்த பங்காரம் கிராமத்தின் அருகே சென்றபோது, காரின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. தொடா்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கியதாம். இதையடுத்து காரில் பயணித்த மூவரும் உடனடியாக கீழே இறங்கினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து சுமாா் 30 நிமிடம் போராடி தீயை அனைத்தனா். ஆயினும் காா் தீயில் எரிந்து முற்றிலும் கருகியது. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments