FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு! இளைஞா் மீது வழக்கு!

மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 3:19 am IST
மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த இளைஞா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மதுபோதையில் சாலையில் படுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சங்கராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மேலூா் பகுதியில் ரோந்து சென்றுள்ளனா்.

அப்போது மேலூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் நடுவே மதுபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக படுத்திருந்த மேலேரியைச் சோ்ந்த ரா.முத்தையன் (29) என்பவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments