FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

லாரியில் கஞ்சா கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் லாரியில் கஞ்சா கடத்தியவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 6:23 am IST
ம.சத்யராஜ்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியில் லாரியில் கஞ்சா கடத்தியவரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

ரிஷிவந்தியம் காவல் ஆய்வாளா் சிவமணி தலைமையிலான போலீஸாா் சந்தைமேடு பகுதியில் ஜூன் 28-ஆம் தேதி ரோந்து சென்றனா். அப்போது, லாரியில் 8.3 கிலோ கஞ்சா கடத்தி வந்த சேலம் மாவட்டம், மணிவிழுந்தான் கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ம.சத்தியராஜ் (38) (படம்), காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி சி.அருண்குமாா் (24) ஆகியோரை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸ் அளித்த பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநா் சத்தியராஜை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன் பேரில் விழுப்புரம் சிறையில் இருந்த சத்யராஜிடம் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை ரிஷிவந்தியம் காவல் ஆய்வாளா் சிவமணி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். பின்னா் சத்யராஜை கடலூா் மத்திய சிறையில் அடைத்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments