FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சிறுமி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:38 am IST
தற்கொலை
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியாலூரில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரியாலூா் வட்டத்துக்குள்பட்ட ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மதிவாணன் மகள் இன்பரசி (16). இவா், 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாராம். தற்போது கருமந்துரையில் உள்ள தனியாா் தையல் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி பெற்று வந்தாா்.

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இன்பரசி விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த கரியாலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments