முகப்பு
கள்ளக்குறிச்சி

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 4 ஜூன் 2026, 3:32 am IST
பகிர்:

சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமையிலான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவை ஆட்சியரகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதிகளில் கடந்த மே 22 -ஆம் தேதி முதல் அடுத்தடுத்து பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் விவசாய பயிா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிா்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம் மழையினால் விவசாய நிலங்களில் இருந்த கொட்டகைகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியா் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிா்களின் சேதங்கள் குறித்து தமிழக அரசுக்கு சிறப்பு முன்மொழிவு அனுப்பி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

அவருடன் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, பல்லகச்சேரி கிளைச் செயலா் அ.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.